close
Choose your channels

மகத் வாழ்க்கையை சீரழித்த இரண்டு பெண்கள்: பிரபல நடிகை ஆவேசம்

Monday, August 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மகத் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். அவர் உள்ளே இருந்தபோது உள்ள கோபம் வெளியே போனபோது பலருக்கு ஏற்படவில்லை. காரணம் அவர் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவால் திசை திருப்பப்பட்டு கெட்டவராக மாறிவிட்டார் என்பதே உண்மை. எனவே மகத் வெளியேறிய போது கோபத்திற்கு பதில் பரிதாபம் தான் எழுந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 போட்டியாளரும் நகைச்சுவை நடிகையுமான ஆர்த்தி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை சீரழித்துவிட்டனர். ஆனால் இதுவும் ஒரு வகையில் நல்லதே. இனிமேலாவது மகத் இதுபோன்ற பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதேபோல் மகத்தின் தற்போதைய நிலையை அவரது காதலி பிராய்ச்சி புரிந்து கொள்வார் என்று நினைக்கின்றேன். மகத் தற்போது ஒரு நல்ல அனுபவத்தை பெற்றிருப்பதால் இனிமேல் அவரது வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் மகத் வெளியேறியது குறித்து புலம்பிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா குறித்து கூறிய ஆர்த்தி, 'கவலைப்பட வேண்டாம், அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் செய்து உங்கள் இருவரையும் நாங்கள் வெளியே அனுப்புகிறோம்' என்று காட்டமாக கூறினார். மேலும் ரித்விகா தனது சிறந்த தோழி என்றும் முதல் நாளில் இருந்து அவர் கவனமாக இந்த விளையாட்டை விளையாடுவதாகவும் தெரிவித்த ஆர்த்தி, இந்த பிக்பாஸ் சீசனில் மும்தாஜ் அல்லது செண்ட்ராயன் வெற்றி பெறுவார் என்று தான் கருதுவதாக தெரிவித்தார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.