close
Choose your channels

இயக்குநர் வசந்தின், “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்“ படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடந்த 26 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட திரைப்படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்“. இந்தப் படம் தற்போது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு நடிகர் சூர்யா தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இதில்வரும் பெண்கள் வித்தியாசமான சூழ்நிலைகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்கின்றனர். ஆனாலும் இவர்களது வாழ்க்கையை ஒரு ஆண்தான் தீர்மானிக்கிறான் என்ற கதையம்சத்தை காட்டியுள்ளது இந்தப்படம்.

மேலும் எழுத்தாளர் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரது சிறுகதைகளை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படம் கமர்ஷியல் கலக்காமல் இயல்பாக அமைக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் நடித்துள்ள காளீஸ்வரி சீனிவாசன், பார்வதி, லஷ்மி பிரியா போன்றோருடைய நடிப்பும் தற்போது பாராட்டை பெற்றுவருகிறது.

இந்நிலையில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்“ படத்திற்கு கிடைத்துள்ள மனதிற்கு இதமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தை மிகவும் விரும்பி பார்த்தேன் ரசித்தேன். வசந்த் சாரின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது. வசந்த் சாருக்கும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் வணக்கங்கள்“ என்று நடிகர் சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.