close
Choose your channels

அப்பீல் செய்யப்போகிறாரா விஜய்? சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை என தகவல்!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு பதிவு செய்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீதிபதியின் ஆட்சேபனைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரி விலக்கு கோரி வழக்கு பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றும் அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொள்ளலாம் அல்லது தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கலாம் என்றும் அதையும் தாண்டி அவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது தேவையில்லாதது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் கூறிய கருத்தையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தன் மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அப்பீல் செய்வது குறித்து முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் விஜய்க்கு சீமான், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பல திரையுலக பிரபலங்களும் ஆதரவு தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.