close
Choose your channels

தாயையும் மகளையும் படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட நடிகர்! அதிர்ச்சி தகவல்

Saturday, November 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாடல் அழகி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, தனுஷ் நடித்த ‘மரியான்’, விஷால் நடித்த ‘திமிறு’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன். இவர் மீது மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் சமீபத்தில் ‘மீடூ’ புகார் கூறியிருந்த நிலையில் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து புகார் கொடுத்தார். மேலும் தனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மிருதுளா காவல்துறையினர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விநாயகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதனையடுத்து நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் மாடல் அழகி மிருதுளாதேவிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.