close
Choose your channels

ஆண் குழந்தைக்கு தாயான 'விக்ரம்' பட நடிகை: வைரல் புகைப்படம்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனிதா. அதன் பின்னர் விக்ரமின் ’சாமுராய்’ விஜய்யின் ‘சுக்ரன்’ உள்ளிட்ட தமிழ் ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ரோகிட் ஷெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனிதா. இந்த நிலையில் சமீபத்தில் அனிதா கர்ப்பம் ஆனார் என்பதும் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அனிதாவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கைவிரல் தன்னுடைய விரலை பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அனிதா பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து அனிதாவுக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.