close
Choose your channels

ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகையின் சாட்டையடி பதில்

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை நேஹா சமூக வலைத்தளங்கள் மூலம் படுக்கைக்கு தன்னை அழைத்த நபரை அடையாளம் காட்டி வறுத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சி தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகை காயத்ரியிடம் ஒருவர் வாலாட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் காயத்ரியிடம் 'ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம் தருகிறேன், வருகின்றீர்களா? என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த நடிகை அதனை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவு செய்து 'உங்கள் தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பிற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார். காயத்ரியின் இந்த சாட்டையடி பதிலடிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.