close
Choose your channels

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்!

Saturday, February 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது உச்ச கட்டத்தில் உள்ள நிலையில் இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்களும் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக பாப் பாடகி ரிஹானா ஆதரவளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இங்கிலாந்து நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொருமுறையும் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் வருவதாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஜமீலா ஜமீல் இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் ’இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து நான் பலமுறை பேசியிருக்கிறேன். அவ்வாறு ஒவ்வொருமுறை பேசும்போதும் நான் கொலை மிரட்டல்களையும்,ம் பாலியல் வன்முறை அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன். நான் ஒரு சக மனிதர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மிரட்டுங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகை ஜமீலா ஜமீலின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.