close
Choose your channels

ஆக்சிஜன் குறித்த போலி செய்தி: பிரபல நடிகையின் டுவிட்டர் பக்கம் முடக்கம்!

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் ஹிந்தி உள்பட பல மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் கடந்த சில நாட்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ஆக்சிஜன் குறித்து அவர் சமீபத்தில் பதிவு செய்த ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து டுவிட்டர் இந்தியா நிர்வாகம் அவரது கணக்கை முடக்கி உள்ளது. நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்சிஜன் குறித்து போலி செய்திகளை பரப்பியதால் டுவிட்டர் நிறுவனம் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.