close
Choose your channels

30 வினாடிகள் பேசி 3 நாட்கள் பேச வைத்துவிட்டார் கமல்! பிரபல நடிகை

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அந்த கூட்டத்தில் அவர் இந்து தீவிரவாதம் குறித்து பேசியது வெறும் 30 வினாடிகள். இந்த 30 வினாடிகள் பேச்சுதான் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகி, ஊடகங்கள் மட்டுமின்றி தற்போது நீதிமன்றமும் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பேச்சுகுறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, 'கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே... பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? நான் நினைக்கின்றேன் அவர் 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க' என்று கூறியுள்ளார்.

கஸ்தூரி கூறியபடி நான்கு தொகுதிகளிலும் அதிக வாக்குகளை கமல் பெறுவாரா? அல்லது தொடர்ந்து ஒரு மதத்தை மட்டுமே விமர்சிக்கும் கமலுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிப்பார்களா? என்பதை மே 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.