close
Choose your channels

மொட்டை மாடியில் போட்டோ ஷுட் நடத்திய முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

Monday, March 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“இதென்ன மாயம்“ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகர் சூர்யா, விக்ரம், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், பவன் கல்யாண் எனப் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துவிட்டார். இவர் தற்போது சூப்பர் ஸ்டாரின் “அண்ணாத்த“ படத்திலும் இடம் பெற்றிருக்கிறார். இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் 2 திரைப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் பிசியான நடிகையாக இருந்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எப்போதும் தன்னுடைய செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவழித்து வரும் இவர் முதல் முறையாக மொட்டை மாடியில் நின்று போட்டோக்களை க்ளிக் செய்து இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் தெலுங்கில் “மகாநடி” திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய விருது பெற்ற இவர் சமீபகாலமாக ஓவியம், பியானோ, பாடுவது என தனக்குள் ஒளிந்துள்ள திறமைகளையும் அவ்வபோது வெளிப்படுத்தி வருகிறார். இவரது பன்முகத் திறமைகளைப் பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.