close
Choose your channels

கோவிலுக்கு யானை பரிசளித்த தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை.. அந்த யானையில் ஒரு டிவிஸ்ட்..!

Monday, March 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகை கேரளா கோவிலுக்கு யானையை பரிசாக அளித்த நிலையில் அந்த யானையில் ஒரு ட்விஸ்ட் இருப்பதை அறிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கேரளா கோவில் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது கோவிலில் அலங்கரிக்கப்பட்ட யானை தான் என்பதும் பலர் யானைகளை கோவிலுக்கு தானமாக வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பீட்டா அமைப்பு உயிருள்ள யானைக்கு பதிலாக இயந்திர யானையை தானமாக கொடுக்க முன் வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியாமணி கேரளாவில் உள்ள திருக்கயில் மகாதேவா என்ற கோயிலுக்கு ஒரு இயந்திர யானையை நன்கொடையாக வழங்கி உள்ளார். பிரியா மணி மற்றும் பீட்டா அமைப்பு இணைந்து வழங்கிய இந்த யானைக்கு மகாதேவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா கோவிலில் ஒரு இயந்திர யானை இருக்கும் நிலையில் இது இரண்டாவது இயந்திர யானை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரியாமணி கூறுகையில், ‘தொழில்நுட்பம் வாழ்ந்து வரும் காலத்தில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இயந்திரங்கள் மூலம் கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த எண்ணத்தில் தான் இயந்திர யானையை பீட்டா அமைப்புடன் சேர்ந்து நன்கொடையாக வழங்கினேன் என்றும் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.