close
Choose your channels

இது ரொம்ப ரொம்ப கேவலமானது. நடிகை சாய்பல்லவின் ஆவேச பதிவு..!

Friday, September 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. ஆனால் இந்த பூஜையில் இருந்த புகைப்படத்தை எடிட் செய்து ஒரு சிலர் அவர் திருமணம் செய்து கொண்டதாக உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து நடிகை சாய் பல்லவி தற்போது ஆவேசத்துடன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி, நாக சைதன்யாவுடன் நடிக்க இருக்கும் அடுத்த தெலுங்கு படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாய்பல்லவி பக்கத்தில் நின்ற ஒருவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் கட்டிங் வெட்டிங் செய்து சாய்பல்லவிக்கும் அவருக்கு அருகில் நிற்பவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக ஒரு சிலர் வதந்தி பரப்பி விட்டனர். இந்த வதந்தி குறித்து ஆவேசமாக சாய்பல்லவி கூறியதாவது:

நான் வதந்திகள் பற்றி பொதுவாக கவலைப்படுவதில்லை. ஆனால் அது எனது குடும்ப நண்பர்களை பாதிக்கும் வகையில் இருந்தால் நான் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். எனது புதிய படத்தின் பூஜை விழாவிலிருந்து ஒரு படத்தை வேண்டும் என்று திட்டமிட்டு எடிட் செய்து கேவலமான நோக்கத்தோடு வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

எனது வேலையில் மகிழ்ச்சியான அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சில வேலை இல்லாதவர்கள் செய்யும் செயலுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு வந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இது போன்ற கேவலமான வேலையை இனிமேல் செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஆவேச பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.