close
Choose your channels

14 வருடங்களுக்கு பின் கேரளா செல்லும் விஜய்.. அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா?

Thursday, March 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவுக்கு படப்பிடிப்புக்காக செல்ல இருப்பதை அடுத்து அங்கும் ரசிகர்கள் முன்னிலையில் வேன் மேல் ஏறி செல்பி புகைப்படம் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் உட்பட படக்குழுவினர் இன்னும் சில நாட்களில் கேரளா செல்ல உள்ளதாக தெரிகிறது.

14 ஆண்டுகளுக்கு முன்பு ’காவலன்’ என்ற படத்தில் நடிக்கும் போது விஜய் கேரளா சென்றதையடுத்து, அதன் பின்னர் தற்போது தான் அவர் கேரளா செல்ல உள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரது படப்பிடிப்பை பார்க்க ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது அவர் நெய்வேலி, புதுவை ஆகிய பகுதிகளில் ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்தது போல் கேரளாவிலும் செல்பி எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.