close
Choose your channels

'எல்.ஐ.சி' படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் இன்னொரு படம்.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

Tuesday, December 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த ’லவ் டுடே’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நட்சத்திரமாக மாறி உள்ளார்.

ஏற்கனவே அவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’எல்ஐசி ’என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை உடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அசோக் செல்வன் நடித்த ’ஓம் மை கடவுளே’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’லவ் டுடே’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.