close
Choose your channels

பாவனியை அடுத்து பிரியங்கா: வெள்ளிக்கிழமை மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கும் போட்டியாளர்கள்!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திங்கள் முதல் வியாழன் வரை போட்டியாளர்கள் சண்டை சச்சரவு செய்வதும் சனி ஞாயிறு கமல்ஹாசன் நாள் என்பதால் வெள்ளிக்கிழமை பெட்டிப்பாம்பாக அடங்கி நல்ல பிள்ளைபோல் இருப்பதையும் கடந்த ஐந்து சீசன்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேற்று வரை ஆவேசமாக சண்டை போட்ட பாவனி, இன்று திடீரென ராஜு மற்றும் சிபியிடம் சமாதானம் செய்து கொண்டு, அவர்களை கட்டிப்பிடித்து வெள்ளை கொடியையும் காட்டி விட்டார் என்பதை முதல் புரமோவில் பார்ப்போம்.

இந்த நிலையில் அடுத்ததாக தாமரை மற்றும் பிரியங்கா இந்தியா-பாகிஸ்தான் போல் கடந்த சில நாட்களாக சண்டை போட்டுக்கொண்ட நிலையில் தற்போது திடீரென இருவரும் சமாதானமாகி கட்டிப்பிடித்து கொண்ட காட்சி அடுத்த புரமோவில் உள்ளது.

இந்த பிரச்சினைகள் குறித்து கமல்ஹாசன் அதிரடியாக கேள்வி கேட்பார் என்று எண்ணியே தாங்கள் சமாதானம் அடைந்து விட்டதாக கூறுவதற்காக இந்த நாடகம் நடக்கின்றதா? என்ற சந்தேகமும் பார்வையாளர்களுக்கு தற்போது வருகிறது. இந்த சமாதானம் உண்மையா? இல்லையா? என்பது வரும் திங்கட்கிழமை தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.