close
Choose your channels

எவிக்சன் பட்டியலில் ஐஸ்வர்யா உள்பட ஐவர்: யாஷிகா திட்டம் என்ன?

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வார நாமினேஷன் படலம் நேற்று நடைபெற்றபோது ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், செண்ட்ராயன் மற்றும் விஜயலட்சுமி ஆகிய ஐவர் எவிக்சன் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யாவை அதிக நபர்கள் நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நாமினேஷன் படலம் சற்று வித்தியாசமாக நடந்தது. ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் நாமினேஷன் செய்யவிரும்பும் மூன்றுநபர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும். அந்த மூன்று நபர்களும் தங்கள் தரப்பு விளக்கத்தை நாமினேட் செய்பவரிடம் கூறி அவருடைய மனதை மாற்ற முயற்சிக்கலாம். இறுதியில் இந்த மூவரில் இருவரை அவர் நாமினேட் செய்வார். இதில் ஐஸ்வர்யா தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தாலும் இறுதியில் மக்களை சந்திக்க தான் தயார் என முடிவு செய்து எவிக்சன் பட்டியலில் இருக்க சம்மதித்துள்ளார்.

சர்வாதிகாரி டாஸ்க்கில் இருந்தே ஐஸ்வர்யாவை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று காத்திருக்கும் மக்களுக்கு தற்போது ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா இந்த வாரம் வீட்டின் தலைவியாக இருப்பதால் ஐஸ்வர்யா ஏதாவது ஒரு வழியில் காப்பாற்றப்படுவார் என்றே தெரிகிறது. ஐஸ்வர்யா வெளியேறினால் அடுத்த டார்கெட் தன்மீதுதான் விழும் என்று யாஷிகா புரிந்து கொண்டுள்ளதால் அவர் இந்த வாரம் ஐஸ்வர்யாவை காப்பாற்ற ஏதாவது ஒரு விதத்தில் முயற்சிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.