close
Choose your channels

7 வருட இடைவெளி ஏன்? தனுஷின் பிரிவுக்கு பின் மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Tuesday, April 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2015ஆம் ஆண்டு ’வை ராஜா வை’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ’வை ராஜா வை’ படத்திற்கு பிறகு ஏழு வருட இடைவெளி ஏன் என்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். ‘வை ராஜா வை’ படம் ரிலீஸ் ஆன பிறகு தனக்கு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து படங்கள் இயக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அப்போது குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால் தன்னால் அந்த படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டதால் தனது இயக்குனர் பணியை மீண்டும் தொடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் பாலிவுட் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் ராகவா லாரன்ஸை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்துள்ளதை அடுத்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.