close
Choose your channels

'ஒய் திஸ் கொலைவெறி' பாடலின் வெற்றி தான் '3' படத்தின் தோல்விக்கு காரணம்? ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Sunday, February 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘3’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஒய் திஸ் கொலைவெறி’ என்ற பாடல் படத்தின் ரிலீஸுக்கு முன்பு சூப்பர் ஹிட் ஆகி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது .

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடலின் வெற்றி திரைப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் அவ்வளவு பெரிய ஹிட் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த பாடல் படத்தின் மீதான அதீத அழுத்தத்தை கொடுத்து விட்டது. அது படத்தின் வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை.

ஒரு சீரியஸான ரொமாண்டிக் படத்தை நாங்கள் எடுத்து வைத்திருந்தோம், ஆனால் அந்த ஜாலியான பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் படமும் அதே ரீதியில் ஜாலியாக இருக்கும் என்று வந்த ரசிகர்களுக்கு ஒரு சீரியஸ் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கலாம். எங்கள் படத்தின் போக்கையே அந்த பாடல் மாற்றி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் ஒரு பாடலின் வெற்றி படத்தின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.