close
Choose your channels

அஜித்தே பார்த்து ஆச்சரியம் அடைந்த அறிக்கை

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் அஜித் மட்டுமே எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அஜித் குறித்த செய்தி தினந்தோறும் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமூக வலைதளங்களிலும் விலகிய அஜித், மீண்டும் சமூக வலைதளங்களில் இணைய இருப்பதாக ஒரு அறிக்கை அவரது கையெழுத்துடன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனையடுத்து அந்த சமூக வலைப்பக்கத்தில் அஜித் ரசிகர்கள் வேகவேகமாக பாலோ செய்தனர். ஆனால் அந்த அறிக்கை அஜித் வெளியிட்ட அறிக்கை கிடையாது என்றும் அஜித் பெயரில் வெளியான போலி அறிக்கையை என்றும் அஜித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த போலியான அறிக்கை அச்சு அசலாக அஜித் கையெழுத்துடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டது குறித்து அஜித்தே ஆச்சரியம் அடைந்ததாக கூறப்படுகிறது எனவே அதில் சமூகவலைதளத்தில் மீண்டும் அஜித் இணைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பொய்யானது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.