close
Choose your channels

அக்சயகுமாரின் 'பெல்பாட்டம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Saturday, August 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்காத போதிலும் திரை அரங்குகள் திறந்த ஒருசில மாநிலங்களில் மட்டும் வெளியான அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ திரைப்படம் வசூல் சாதனை செய்திருப்பது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்ஷய்குமார் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான ‘பெல்பாட்டம்’ திரைப்படம் கொரோனா இரண்டாவது அலைக்கு பின் திரையரங்குகளில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய்குமார், வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.2.75 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், கேரளா உள்பட பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது என்பதும் இந்த மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்து இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தால் இன்னும் பல கோடி வசூல் செய்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திரை அரங்குகள் திறந்த மாநிலங்களிலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பெல்பாட்டம்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்ள் கிடைத்துள்ளதால் அக்ஷய் குமார் உள்பட படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இந்த படம் விரைவில் அமேசான் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.