close
Choose your channels

மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' வெற்றிக் கூட்டணி!

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் மெகா ஹிட்டான படங்களில் ஒன்றான ’பருத்திவீரன்’ கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதன் பின்னர் ’ராம்’ என்ற திரைப்படத்தை 2005ஆம் ஆண்டு இயக்கிய அமீர், 2007 ஆம் ஆண்டு ’பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில்தான் நடிகராக கார்த்தி அறிமுகமானார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் விருதுகளை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பதும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க அமீர் முடிவு செய்துள்ளதாகவும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘பருத்தி வீரன்’ படத்தில் இணைந்த அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தில் கார்த்தியும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.