close
Choose your channels

அவகிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா செருப்பால அடிக்க சொல்லியிருப்பா? ஆண்ட்ரியா

Thursday, May 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பிய போது ’இந்த கேள்வியை ’தரமணி’ ஆல்தியாகிட்ட கேட்டு இருந்தால் கண்டிப்பாக அவள் செருப்பை கழட்டி அடிக்க சொல்லி இருப்பா என்று கூறியுள்ளார். ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த தரமணி படத்தில் ஆண்ட்ரியா பெண்ணியம் கொண்ட போல்டான கேரக்டரில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஆண்ட்ரியா இதுகுறித்து கூறியபோது, ‘ஆல்தியா கிட்ட இருக்குற தைரியம் எனக்கு இல்லை. ஆனால் இந்த கொரோனா வைரஸ் தரும் பயத்தை விட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்கின்ற உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. இந்த செய்திகள் நிஜமாகவே வருத்தத்தை அளிக்கிறது

மேலும் இதுகுறித்த விளைவுகளை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. உணர்வுபூர்வமான போராட்டத்தை எதிர்கொள்ள பெண்கள் தைரியத்தை கையாள வேண்டும். தங்களுக்கு குடும்ப வன்முறைகள் ஏற்பட்டால் அதை தயங்காமல் வெளியே சொல்ல வேண்டும் என்று ஆண்ட்ரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.