close
Choose your channels

25 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சி

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1992ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் இசையமைத்த இன்னொரு படம் 'யோதா' என்ற மலையாள படம். இது ரஹ்மானின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின்னர் ரஹ்மான் மலையாள படங்களுக்கு இசையமைக்கவில்லை. இந்த நிலையில் 25 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மலையாள படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரிதிவிராஜ் நடிக்கும் 'Aadujeevitham' என்ற படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பிளஸ்ஸி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சியால் முற்றிலும் வித்தியாசமான இசை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.