close
Choose your channels

அழகிய தீர்வு: மத்திய அரசின் மாற்று முடிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு!

Monday, June 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு இந்தியை திணிப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தியை தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும், மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மாற்று முடிவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'அழகிய தீர்வு! ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” என்று பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் மூன்றாவது மொழியாக மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஏதாவது ஒரு இந்திய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தமிழ், ஆங்கிலத்தை அடுத்து பெரும்பாலான மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியை தான் தேர்வு செய்வார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட மற்ற இந்திய மொழியை தேர்வு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே மத்திய அரசின் முடிவு மாற்றாக இருப்பது போல் தெரிந்தாலும், கிட்டத்தட்ட முந்தைய முடிவுதான் இதுவும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.,
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.