close
Choose your channels

'அரண்மனை 4' படத்தின் முரட்டு சம்பவம்.. 3 வாரத்தில் சாதனை வசூல்..  2024ன் முதல் வெற்றிப்படமா?

Wednesday, May 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை வாரி குவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் 3 வாரங்களில் வசூலில் முரட்டு சம்பவம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்து இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் கிளைமாக்ஸ் அம்மன் பாடலில் குஷ்பு , சிம்ரன் செம்ம டான்ஸ் ஆடியிருந்தனர் என்பதும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

‘அரண்மனை 4’ தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஐந்து நாள் வசூல் 50 கோடி என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி மூன்று வாரங்கள் மட்டுமே ஆகி உள்ள நிலையில் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அரண்மனை’ படத்தின் சீரிஸ்களில் இந்த படம் தான் அதிக வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு பல மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் முதல் சூப்பர் ஹிட் படமாகவும் ‘அரண்மனை 4’கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.