close
Choose your channels

கதை என்னுடையதுதான் : ஏ.ஆர்.முருகதாஸ்

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் கதை குறித்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் இந்த கதையை சொந்தம் கொண்டாடிய வருண் ராஜேந்திரனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

வழக்கம் போல் நிறைய வதந்தி இஷ்டத்துக்கு பரவிக்கிட்டு இருக்கிறது. அதற்கான ஒரு சின்ன விளக்கம்தான் இது. பாக்யராஜ் என்னை அழைத்து இதுபோன்ற ஒரு பிரச்னை சென்றுகொண்டிருக்கிறது எனக் கூறினார். கள்ள ஓட்டு பிரச்னையை மையமாக வைத்து 10 வருடங்களுக்கு முன்பு அருண் என்பவர் ஒரு கதையை பதிவு செய்துள்ளார். மற்றபடி இந்தக் கதைக்கும், அந்தக் கதைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது.

ஆனால், நமக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குநர் இப்படியொரு மூலக்கதையை பதிவு செய்திருக்கிறார். அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் ஒரு கார்டு போடுங்கள் என்று சொன்னார். சரி என்று நான் ஒத்துக் கொண்டேன். அந்த வகையில் மட்டுமே அவர் பெயர் வரும். மற்றபடி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை' என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.