close
Choose your channels

எல்லா பெண்களிடமும் கடலை போட்ட அசல்.. கடைசியில் சிக்கிய சிங்கப்பூர் போட்டியாளர்!

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பிரபலமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் ஒரே வாரத்தில் பிரபலமாகிவிட்டார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட அனைவரிடமும் கடலை போட ஆரம்பித்து யாரையாவது ஒருவரை காதலித்து ஜோடியாகத்தான் வெளியேற வேண்டும் என்ற முடிவில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரோ என எண்ண தோன்றுகிறது.

எல்லா பெண்களிடம் கடலை போட்டு யாராவது சிக்கினால் அவரை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கின்றாரோ என்று அவரது செய்கையில் இருந்து சந்தேகம் ஏற்படுகிறது.

தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி உள்பட பலரிடம் முயற்சித்தும் அவர்கள் சுதாரித்து விலகியதால் கடைசியில் தற்போது சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியை அவர் மடக்கி விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சிங்கப்பூர் நிவாஷினி பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் அவரை அசல் கோளாறு பாட்டு பாடியே கவர்ந்து விட்டதாகவே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் அசல் குறித்து ஆயிஷா நிவாஷினியிடம் போட்டு கொடுக்க அதற்கு பதிலடியாக ஆயிஷாவை நிவாஷினி நாமினேட் செய்ததால் அசல் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாக தெரிகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அசல் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளார் என்பதும் அவர் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதால் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அசல் வெளியேறி விட்டால் நிவாஷினி நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.