close
Choose your channels

ரஜினியை அடுத்து அதர்வாவுக்கும் பாலிவுட் வில்லன்

Wednesday, January 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக அரவிந்தசாமி நடித்த பின்னர் வில்லன் வேடத்திற்கு என்று தனி மதிப்பு வந்துவிட்டது. இந்த படத்தின் வெற்றியால் பிரபல நடிகர்கள் கூட வில்லனாக நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர் அதர்வாவின் 'கணிதன்' படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கி வரும் 'கணிதன்' படத்தில் அதர்வா, ஒரு பத்திரிகை ரிப்போர்ட்டராக நடித்து வருகிறார். இன்வெஸ்டிகேட் த்ரில்லர் படமான இந்த படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் வெயிட்டானது என்பதால் இந்த கேரக்டரில் நடிக்க பாலிவுட்டின் பிரபல நடிகர் தருண் அரோரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் '2.0' படத்தில் வில்லனாக அக்சயகுமார் நடிப்பதை அடுத்து தருண் அரோராவும் வில்லனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.