close
Choose your channels

விஜய்சேதுபதி மீது தாக்குதல்: என்ன நடந்தது பெங்களூரு விமான நிலையத்தில்?

Thursday, November 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய்சேதுபதி நேற்று பெங்களூர் சென்றிருந்த நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பெங்களூரு காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். பெங்களூர் விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததாகவும் இது தொடர்பாக விஜய்சேதுபதியின் உதவியாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் தங்களுக்குள் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதாக எழுதி கொடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அதேபோல் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபரும் எழுதி கொடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து இரு தரப்பும் சமாதானமாக சென்று விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி வருவதற்காக அவருடைய உதவியாளர் ஒருவர் பயணி ஒருவரை பிடித்து தள்ளியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்த பயணி விஜய்சேதுபதியின் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பிரச்சனையை பேசி சமாதானம் செய்து வைத்ததால் இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.