close
Choose your channels

பிக்பாஸ் அமீர் மாணவிகளுக்கு இப்படி ஒரு சோகமா? வெளியே வந்து என்ன சொல்வாரோ?

Tuesday, January 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல டான்ஸ் மாஸ்டர் அமீர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அவருடைய மாணவிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 90 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்டுகார்டு போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த நிலையில் அமீர் கடந்து வந்த வாழ்க்கை குறித்து கூறிய போது தனது அம்மாவின் ஆசைப்படி நடனப் பள்ளியைத் ஆரம்பித்ததாகவும் அந்த நடன பள்ளியில் முதல் மாணவிகளாக சேர்ந்த அலெனா மற்றும் ஆயிஷா ஆகியோர்கள் தான் தனது வாழ்க்கையையே மாற்றினார்கள் என்றும் அவர்களுடைய அம்மாவின் தயவால்தான் நான் வளர்ந்தேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அமீரின் மாணவிகளான அலெனா மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடினர். இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியேறி உள்ளனர்.

இதுகுறித்து அலெனா, ஆயிஷாவின் தாயார் தனது சமூக வலைத்தளத்தில், ‘தயவுசெய்து அழுது என்னை அமீர் கிட்ட மாட்டி விடாதே, ஏற்கனவே அமீர் வெளியே வந்து என்ன சொல்வான் என்ற பீதி எனக்கு இருக்கிறது. உனக்கு தோல்வி புதிதான ஒன்று என்றாலும் இனிமேல் கவனத்துடன் இருந்து வெற்றியை நோக்கி செல்வோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.