close
Choose your channels

அன்பு காட்டினால் சண்டை போட முடியாது.. வன்மம் என்கிட்ட இருக்குது.. சுய கணிப்பில் போட்டியாளர்கள்..!

Sunday, December 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரோமோவில் போட்டியாளர்களிடம் உங்களைப் பற்றிய சுய கணிப்பு என்ன? என்பது குறித்து கமல்ஹாசன் கேட்கிறார். அதில் சுயநலம், அதிர்ஷ்டம், வன்மம், அன்பு, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, திறமை ஆகியவை உங்களிடம் வெளிப்பட்டதா? என்று கேட்கிறார்.

இதற்கு முதலில் பேசிய விஷ்ணு ’அன்பு என்னிடம் நிறைய இருக்கிறது, ஆனால் இங்கு நான் நிறைய காட்டவே இல்லை, அன்பு காட்டினால் அவர்களிடம் சண்டை போட முடியாது’ என கூற கமல்ஹாசன் சிரிக்கிறார்.

இதனை அடுத்து விசித்ரா, ‘சகிப்புத்தன்மை தன்னிடம் நிறைய இருக்கிறது’ என்று கூறுகிறார். அப்போது பூர்ணிமா மற்றும் மாயா சிரிக்க, ’யாரோ சிரிக்கிறார்கள் ஆனால் யார் என்பதை நான் சொல்ல மாட்டேன்’ என்று கமல் கூறுகிறார்.

இதையடுத்து ரவீனா, ‘வன்மம் என்னிடம் அதிகமாக இருக்கிறது, வன்மம் இல்லாமல் இந்த வீட்டில் என்னால் வாழவே முடியாது’ என்று கூற அதற்கு கமல்ஹாசன் ’நீங்கள் எல்லாம் சொல்வதைப் பார்த்தால், வன்மம் என்பது வாழ்க்கைக்கு ரொம்ப தேவையான ஒன்றாக தெரிகிறது’ என்று கிண்டல் அடித்தார்.

மொத்தத்தில் போட்டியாளர்களின் சுய கணிப்பு என்பது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் வகையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.