close
Choose your channels

எவிக்சனில் இருந்து நித்யாவை காப்பாற்றிய பிக்பாஸ்

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் பாதி நாள் வெங்காய சண்டையில் கழிந்ததால் பார்வையாளர்கள் பொறுமை இழந்தனர். இதனால் நித்யா மீது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று போட்டியில் இருந்து வெளியேறும் நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் நித்யாவை வெளியேற்றும்படி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே போட்டியாளர்கள் நித்யா, மும்தாஜ், அனந்து ஆகியோர்களின் பெயர்களை கூறினர்

ஆனால் திடீரென பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நித்யாவை நேரடியாக பிக்பாஸ் தேர்வு செய்துள்ளார். இதனால் நித்யாவை யாரும் எவிக்சன் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நித்யாவை எவிக்சன் செய்துவிட்டால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சண்டை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் நித்யாவை பிக்பாஸ் காப்பாற்றியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நித்யா தலைவியாகிவிட்டால் பாலாஜி நிலைமை என்ன ஆகும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. நித்யா தலைவியாக உள்ள இந்த வாரம் விறுவிறுப்பு அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.