close
Choose your channels

இனி போட்டியாளர்களுக்கு பத்திய சாப்பாடு தான்: முக்கிய பொருட்களை வெளியேற்றிய பிக்பாஸ்..!

Wednesday, November 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் அறிவிப்புகள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக உள்ளன என்பதை பார்த்து வருகிறோம்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது, இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வி அடைந்தால் பிக் பாஸ் வீட்டில் உள்ள உப்பு மற்றும் சர்க்கரை வெளியேற்றப்படும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்கள் எப்படியாவது அந்த டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கின்றனர் அர்ச்சனா, மாயா, நிக்சன், மணி சந்திரா, ரவீனா உள்ளிட்டோர் விளையாடும் நிலையில் இந்த டாஸ்க்கில் அவர்கள் தோற்று விடுகின்றனர்

டாஸ்க்கில் தோற்றால் உப்பு மற்றும் சர்க்கரையை பிக் பாஸ் வீட்டில் இருந்து எடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும்போதே சிலர் சர்க்கரையை எடுத்து ஒளித்து வைக்கின்றனர். ஏகப்பட்ட கேமிராக்கள் இருக்கும்போது, பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் போது, சர்க்கரை ஒளித்து வைத்தால் தெரிந்து விடாதா என்ற நினைப்பு கூட இல்லாமல் ஒளித்து வைக்கின்றனர்.

இதனை அடுத்து ஒளித்து வைத்த சர்க்கரையை கண்டுபிடித்து கேப்டன் தினேஷ் பிக் பாஸ் இடம் ஒப்படைக்கிறார். திருடுவதாக இருந்தாலும் ஒரு கெளரவமாக திருட வேண்டாமா என்று அவர் தெரிவித்தார். இதனை அடுத்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இனி உப்பு மற்றும் சர்க்கரை இல்லாத பத்திய சாப்பாடு தான் என்பது குறிப்பிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.