close
Choose your channels

சேரன் வெளியேற்றமா? சீக்ரெட் அறையா?

Sunday, September 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ள ஐவரில் சேரனுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்ததால் அவர் வெளியேற வாய்ப்பு இருந்ததாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் முதலில் முகின் மற்றும் ஷெரின் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கும் கமல், அதன்பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் காப்பாற்றப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார். சேரன் வெளியேறும்போது கவின், லாஸ்லியா மற்றும் வனிதா அழுகின்றனர்.

இதன்பின்னர் பிக்பாஸ் சேரனை பாராட்டி சில வார்த்தைகள் பேசுகிறார். அவருடைய பேச்சால் சேரன் நெகிழ்ந்து போக, சீக்ரெட் அறைக்கு செல்ல வேண்டாம் என நினைத்த சேரன், பிக்பாஸ் பேச்சை கேட்டவுடன் சீக்ரெட் அறைக்கு செல்கிறார். சேரன் தங்க வைக்கப்படும் சீக்ரெட் அறையில் சிகப்பு, புளூ, பச்சை லைட்டுக்கள் இருக்கின்றன. அவருக்கு ஒரு ஹெட்போன் கொடுக்கப்படுகிறது. அதனை வைத்து அவர் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை கவனித்து வருகிறார். ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.