close
Choose your channels

பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

Saturday, July 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே ரொமான்ஸ், சண்டை சச்சரவு என விறுவிறுப்பை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறும் நபர் யார் என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்

வனிதா, மோகன் வைத்யா இருவரும் முதல் இரண்டு வார கேப்டன்கள் என்பதால் இவரைத்தவிர மற்றவர்கள் எவிக்சன் பட்டியலில் இருந்தாலும் இந்த வாரம் மீராமிதுன், சாக்சி அகர்வால், சேரன், கவின், பாத்திமா பாபு, மதுமிதா மற்றும் சரவணன் ஆகிய ஏழு பேர்களில் ஒருவர் வெளியேற வேண்டும்

இந்த முறை கூகுளில் இருந்து ஓட்டு போட முடியாது, மிஸ்ட் கால் அல்லது செயலியில் இருந்து மட்டுமே ஓட்டு போட முடியும் என்பதால் ஓட்டுக்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் மக்களின் ஓட்டுக்கள் எப்படி இருந்தாலும் வீட்டில் இருந்து வெளியேறுவது யார் என்பதை கடந்த சீசனில் இருந்தே பிக்பாஸ் தான் முடிவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்த வாரம் மீராமிதுன், சாக்சி அகர்வால், கவின், பாத்திமா பாபு, மதுமிதா ஆகியோர் வெளியேற வாய்ப்பே இல்லை. இவர்கள் ஐந்து பேர்களை வைத்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடைசிவரை ஓட்டியாக வேண்டும். எனவே மீதியுள்ள சேரன், சரவணன், பாத்திமா பாபு ஆகியோர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் நமக்கு வந்த ஒருசில தகவலின்படி இந்த வாரம் பாத்திமா பாபு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.