close
Choose your channels

கவின் பேச்சால் சேரன் டென்ஷன், சுதாரிப்பாக இருக்கும் லாஸ்லியா!

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக கவின் - லாஸ்லியா காதல் பரபரப்பாக பிக்பாஸ் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தபோது, கவினை தனியாக அழைத்து பேசிய சேரன், ‘இப்போதைக்கு இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். வெளியே சென்ற பின்னர் லாஸ்லியா குடும்பத்தினர்களுடன் கலந்து பேசி அதன்பின் அடுத்தகட்டத்திற்கு செல்லலாம். இந்த வீட்டில் இருக்கும் வரை இனிமேல் காதல் குறித்து லாஸ்லியாவிடம் பேச வேண்டாம் என்று அறிவுரை கூறினார்'. அதை கவினும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் சேரன் வீட்டை விட்டு வெளியேறிய தைரியத்தில் லாஸ்லியாவிடம் தனது காதலை உறுதி செய்யும்படி கவின் மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறார். தனக்கு ஒரு உறுதிமொழியை லாஸ்லியா தரவேண்டும் என்று கவின் அழுத்தம் கொடுக்கின்றார். இதனை சீக்ரெட் அறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த சேரன், என்னிடம் இனிமேல் காதல் குறித்து பேச மாட்டேன் என்று கவின் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது லாஸ்லியாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றார். எனவே மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் கவின் கொடுத்த அழுத்தத்தை லாஸ்லியா நாகரீகமாக நிராகரித்துவிட்டார். தான் வேறொரு நாட்டில் இருந்து வந்துள்ளதால் தனது நாட்டினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் இப்போதைக்கு சொந்த பிரச்சனையை விட நான் ஜெயித்து சென்றால் எனது நாட்டிற்கு பெருமை என்பதே என் கண்முன் இருப்பதாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறுகிறார். இதனால் கவின் அப்செட் ஆனாலும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.