close
Choose your channels

மணிக்கூண்டு டாஸ்க்: லக்சரி பட்ஜெட்டுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் 5 அணிகளாக பிரிக்கப்பட்டனர். இதில் அர்ச்சனா மற்றும் ஷிவானி ஆகிய இரண்டு அணிகள் நன்றாக விளையாடியதையடுத்து அந்த அணியில் உள்ள ஆறு பேர்கள் தலைவர் போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்றனர்

மேலும் சனம், பாலாஜி மற்றும் கேபி அணியினர் அதிக வித்தியாசத்துடன் மணிக்கூண்டு விளையாட்ட்டை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மணிக்கூண்டு டாஸ்க்கில் ஒவ்வொரு அணியும் விளையாடிய தன்மைக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் லக்சரி பட்ஜெட்டை தேர்வு செய்யும் நேரம் உறுதி செய்யப்படும் என்றும் பிக்பாஸ் கூறினார்

இதனை அடுத்து ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் லக்சரி பட்ஜெட்டை தேர்வு செய்தனர். இதில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் உங்கள் அணியின் லக்சரி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் கூறியது எந்த அணியாக இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த நிலையில் 3வது புரமோவில் இருந்து அந்த அணி பாலாஜி அல்லது சனம் அணியாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.