close
Choose your channels

என் வாழ்க்கையில இனிமேல் உன்கிட்ட பேசவே மாட்டேன்: அக்சரா கூறுவது யாரை?

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்கில் ராஜூ போட்டியாளர்களின் புகைப்படங்கள் வரைந்த பெட்டியின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதும், அவரை இழுக்க முடியாமல் சக போட்டியாளர்கள் திணறி வருகின்றனர் என்பதையும் முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் ராஜூ தொடர்ந்து அந்த பெட்டியின் மேல் உட்கார்ந்து இருக்கும் நிலையில், ‘ராஜூ இவ்வாறு உட்கார்ந்து கொண்டால் மற்றவர்கள் அவரை தள்ளிவிட்டு தான் விளையாட வேண்டும் என அக்ஷரா கூறுகிறார்

அப்போது ’வா வந்து தள்ளு’ என ராஜூ கூறும்போது, ‘இனிமேல் என்னிடம் பேசாதே, என் வாழ்க்கையில் இனிமேல் உன்னிடம் நான் பேசவே மாட்டேன்’ என்று ஆவேசமாக கூறுகிறார். அப்போது திடீரென அக்ஷராவுக்கும், பிரியங்காவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

அப்போது பிரியங்கா, ‘என்னிடம் போம்மா கீம்மா என்றெல்லாம் பேசுவதை வைத்துக் கொள்ளாதே, நான் மரியாதையாக பேசுவது போல் நீயும் மரியாதையாக பேச வேண்டும். இந்த வீட்டில் சரி, தவறு என்பது எதுவுமே கிடையாது என்று கூறுகிறார். அதற்கு அக்ஷராவும் ஆவேசமாக பதிலளிக்கிறார். மொத்தத்தில் இன்று அக்ஷரா மிக ஆவேசமாக இருப்பதை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.