close
Choose your channels

என் கண்ணு முன்னாடி வராதே, கடுப்பாயிடுவேன்: சிபி, ராஜூவுக்கு எச்சரிக்கை விடும் அக்சரா!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் கண்ணு முன்னாடி வராதே, கடுப்பாயிருவேன் என்று ராஜு மற்றும் சிபி ஆகிய இருவரையும் நோக்கி ஆத்திரமாக அக்ஷரா கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ’கனா காணும் காலங்கள்’ என்ற பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் சிபிக்கு ஸ்ட்ரிக்ட்டான வார்டன் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிபி தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது செயல்பாடு பிரியங்கா, அக்ஷரா உள்பட ஒரு சிலருக்கு ஆத்திரத்தை உண்டாக்கி உள்ளது.

குறிப்பாக இன்றைய முதல் புரமோவில் சிபியும் அக்ஷராவும் கடுமையாக மோதிக் கொண்ட நிலையில் இரண்டாவது புரமோவில் சிபிக்கு ஆதரவாக பேச வந்த ராஜுவுடன் அக்‌ஷரா மோதும் காட்சிகள் இன்றைய 2-வது புரமோவில் உள்ளன.

நீ பேசாத என்கூட, என் கண்ணு முன்னாடி நிக்காத, கடுப்பாயிருவேன் என்று சிபி மற்றும் ராஜூவை நோக்கி எச்சரிக்கும் விதமாக அக்ஷரா கோபத்துடன் கூறுவது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் முரண்பாடாக உள்ளது. ஒரு ஜாலியான டாஸ்க்கை டாஸ்க்காக பார்க்காமல் அக்ஷரா இந்த அளவுக்கு கோபப்பட வேண்டியதில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் அக்ஷராவுக்கு வாக்குகள் மிக அதிகமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.