close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளர்களை கதறி அழவைத்த அமீர்!

Tuesday, December 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவில் அக்சரா மற்றும் சிபி ஆகியோரின் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதால் இதனை அடுத்து பிக்பாஸ் வீடு சென்டிமென்ட் மற்றும் ஆனந்தத்தில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அமீர் அழவைத்த காட்சிகள் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் தங்களைப் பற்றிய அறிமுகம் செய்யும் டாஸ்க் நடைபெற்றது என்பதும் அதில் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்ச்சிகளை கூறினார்கள் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் தற்போது வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்திருக்கும் அமீர் இன்று தனது வாழ்க்கையில் நடந்ததை கூறுகிறார். ’நான் பிரபுதேவா மாஸ்டர் போல் பெரிய டான்சராக வேண்டும் என்பதே தனது அம்மாவின் கனவு என்றும் தற்போது தனது அம்மாவின் கனவு நிறைவேறி விட்டது என்றும், ஒரு பெரிய சேனலில் ஒரு பெரிய நிகழ்ச்சியில் நான் இருக்கின்றேன், ஆனால் எனது அம்மா இல்லை என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியபோது பிரியங்கா, தாமரை உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுத காட்சிகளுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.