close
Choose your channels

பாக்ஸிங் தெரியுமா? முடிஞ்சா வந்து பாருங்க: சிபி ஆவேசம்

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு மாதத்தில் இதுவரை பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் பொம்மை டாஸ்க் போல் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது வேறு இல்லை என்று தான் தெரிய வருகிறது

குறிப்பாக நேற்று அக்ஷராவை நிரூப் பிடித்த விதம் குறித்து ஆவேசமாக பேசப்பட்டது என்பதும் அக்ஷராவுக்கு இவ்வளவு கோபம் வருமா என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து சிபி, நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசி வருகின்றனர்,. சிபி இதுகுறித்து கூறிய போது, எனக்கு அக்சரா மீதோ அல்லது வேறு யார் மீதோ கோபம் இல்லை. நேற்று அக்சரா அவர் சொன்னதற்கு எதிராக அவரே நடந்துகொண்டார்.

ஒரு பொம்பளையை எப்படி பிடிக்கிறாயே என வருணிடம் அக்சரா கேட்டார். அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பாக்ஸிங் தெரியும் என்றும், முடிந்தால் வந்து பாருங்க என்று கூறினார்.

ஆனால் அதே செயலை இன்னொருத்தர் பண்ணும் போது எவ்வளவு கோபம் வருகிறது. எல்லாமே இரட்டை வேடத்தில் நடந்துகொள்கின்றனர் என்று சிபி கூறினார். அப்போது நிரூப் தான் அக்சராவை தவறாக பிடிக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். அதனால் நான் எதுவும் தப்பாக செய்யவில்லை என்று நிரூப் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.