close
Choose your channels

இனிமே சத்தியமா உங்ககிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்: அண்ணாச்சியை சூடேற்றிய பிரியங்கா!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் கேப்டன் டாஸ்க்கில் பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி மற்றும் நிரூப் ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர் என்பதும் இவர்களில் யார் கேப்டனாக வரக்கூடாது என்பதை முடிவு செய்து அவர்களுக்கு எதிரே இருக்கும் பெளலில் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவிக்கின்றார்.

முதல் புரமோவில் நிரூப் கேப்டனாக வரக்கூடாது என ஒரு சிலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில், ‘நான் உங்களுடைய கைப்பாவை ஆகிவிடுவேன், நீங்கள் என்னை கண்ட்ரோல் பண்ணுவீர்கள் என்று பிரியங்கா கூறுகிறார். இது போல் நீங்களும் நினைக்கவில்லை, நானும் நினைக்கவில்லை என்று இமான் அண்ணாச்சியை நிரூப் பிரெய்ன் வாஷ் செய்ய உடனே, அவரது கூற்றை ஏற்றுக் கொண்ட இமான் அண்ணாச்சி உடனே பிரியங்கா கேப்டனாக வரக்கூடாது என்று தண்ணீர் ஊற்றுகிறார்.

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறிய பிரியங்கா, ‘நன்றி அண்ணாச்சி! உங்கள் வார்த்தைகளை நீங்கள் எப்படி மாற்றுவீர்கள் என்பது எனக்கு தெரிந்து விட்டது. இனிமேல் சத்தியமா உங்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டேன் என்று சூடேற்றும் வகையில் பிரியங்கா கூறுகிறார். இன்றைய நிகழ்ச்சியில் இருந்து இனிவரும் நாட்களில் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி இடையே சூடு பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.