close
Choose your channels

நம்மல ஒதுக்குறாங்கன்னா, செதுக்குறாங்கன்னு அர்த்தம்: இசைவாணி ஆவேசம்

Wednesday, October 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒரு சிலர் தவிர கிட்டத்தட்ட அனைவருமே ஏழ்மை நிலையிலிருந்து பல கஷ்டங்களை அனுபவித்து, பல போராட்டங்களை சந்தித்து, பல சவால்களை சந்தித்து ஓரளவுக்கு முன்னேறியவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இதனால் ஒவ்வொருவரிடம் பல கண்டெண்ட்கள் உள்ளன என்பது அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

அந்த வகையில் இன்றைய இரண்டாவது புரமோவில் இசைவாணி மற்றும் ஸ்ருதி இடையே நடைபெற்ற உரையாடலில், ‘நான் அழவே கூடாது என்று நினைத்தேன், ஆனால் என் அழுகை என்னை வலிமையாக்கியது, அதனால் நான் அழுவேன் என்று கூறுகிறார்.

அப்போது இசைவாணி ’நம்மை ஒரு சிலர் ஒதுக்குகிறார்கள் என்றால் அவர்கள் நம்மை செதுக்குகிறார்கள் என்று அர்த்தம் என்று அவரது கருத்தை ஆமோதிக்கின்றார். மேலும் நம்மை நிறைய இடத்தில் நம்முடைய கலரை வைத்தே நம்மை ஒதுக்குவார்கள் என்று ஸ்ருதி கூறியபோது, இசைவாணி ’எதை ஒருவர் ஒதுக்குகிறார்களோ அதுதான் தனியாக தெரியும் என்று கூறினார்.

நம்மை கலரை வைத்து பலர் கேலியும் கிண்டலும் செய்தார்கள் ஆனால் இந்த வீட்டில் நான் இங்கே இருப்பதற்கு காரணம் அந்த கலர் தான் என்று ஸ்ருதி ஆணித்தரமாக கூறுகிறார். மேலும் எனக்கு இந்த கஷ்டமெல்லாம் வரவில்லை என்றால் இந்த வீட்டிற்கு நான் வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் கூறுவது ஏற்று கொள்ளக்கூடிய உண்மையாகவே உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.