close
Choose your channels

கமல் கூறியும் தவறை ஒப்பு கொள்ளாத பாவனி: குறும்படம் இருக்குமா?

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியின் காயினை திட்டம் போட்டு சுருதி மற்றும் பாவனி எடுத்துவிட்ட நிலையில் இது குறித்த பஞ்சாயத்து வந்த போது தாங்கள் திட்டமிடவில்லை என்றும் தற்செயலாக எடுக்கப்பட்டது என்றும் பாவனியும் சுருதியும் கூறினார். மேலும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகளும் இந்த வாரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் இந்த பஞ்சாயத்து வருகிறது. அப்போது கமல்ஹாசன், ‘யாரை பார்த்து சொன்னாலும் ஒரே மேட்டர் தான் இருக்கும். நீங்கள் பேசும்போது நாங்கள் திட்டமே போடவில்லை என்று சொன்னீர்கள். ஆனால் நாங்கள் பார்த்தது என்னவெனில், நீங்களும் ஸ்ருதியும் இதை செய்ய போகிறேன், இப்படி செய்ய போகிறேன், அப்போ நீ எடுத்துக்கோ’ என்று நீங்கள் கூறியதை முதற்கொண்டு நாங்கள் பார்த்தோம்’ என்று கூறினார்.

கமல்ஹாசன் இவ்வளவு விளக்கமாக கூறியும் பாவனி தன்னுடைய தவறை ஒப்பு கொள்ளாமல் ’நாங்கள் திட்டமே போடவில்லை’ என்று கூற அதன்பிறகு கமலஹாசன் ’நாம் சொல்வது சரியா இல்லையா என்பதே சந்தேகம் வரும்போது மாற்றி மாற்றி பேச வேண்டிய நிலை வரும்’ என்று அறிவுரை கூறுகிறார். இதற்கு மேலும் பாவனி தனது தவறை ஒப்புக் கொள்ளாவிட்டால் குறும்படம் இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.