close
Choose your channels

தூங்கும்போது கூட கயிற்றை பிடித்திருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்: என்ன ஆச்சு?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூங்கும் போது கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் கயிற்றை பிடித்திருக்கும் காட்சி இன்றைய முதல் புரோமோ வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கேப்டன் டாஸ்க் மற்றும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய கேப்டன் டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு கயிறை பிடித்து கொள்ளவேண்டும் என்றும் கயிறைப் பிடித்துக் கொள்ளாமல் விட்டவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் கடைசிவரை கயிறை பிடித்து உள்ளவர் கேப்டன் டாஸ்கில் வெற்றி பெறுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்

இதனை அடுத்து அனைத்து போட்டியாளர்களும் கயிறை பிடித்துக்கொண்டு உள்ளனர் என்பதும் தூங்கும் போது கூட கயிறை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென பிரியங்காவை ’ஏய்’... என்று நிரூப் கூப்பிட உடனே ஆவேசமான பிரியங்கா, ‘ஏய்’ என்றெல்லாம் சொல்லக்கூடாது பெயரை சொல்லி கூப்பிடு என்று மிரட்டும் பாணியில் கூறும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.