close
Choose your channels

'மாயா, எவ்வளவு கல்லு வச்சிருக்கிங்க.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கேள்வி..

Saturday, October 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்த முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் எபிசோடு என்பதால் கூடுதலாக சுவாரசியமா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் கமல்ஹாசன் தோன்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் ’இந்த வீட்டில் இன்னார் எனக்கு தடை என்று சொல்பவர்கள், இந்த கல்லை அவர்களுக்கு கொடுக்கலாம் என்று கூறுகிறார்.

அப்போது பிரதீப், விசித்ரா மேடம் தான் எனக்கு தடையாக இருக்கிறார்கள், அவருக்கு இந்த கல்லை கொடுக்கிறேன்’ என்று கூறுகிறார். பதிலுக்கு விசித்ரா ’என்னோட வளர்ச்சிக்கு தடையாக இருப்பது உறுதியாக பிரதீப் தான், எனவே அவருக்கு இந்த கல்லை கொடுக்கிறேன், நான்தான் அவருடைய டார்க்கர் பாயிண்ட்களை கண்டுபிடித்து வெளியே சொல்லி வருகிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து மணி மாயாவுக்கு கொடுப்பதாக கூறி அவர் மிகவும் டிஸ்கரேஜ் செய்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அதன் பிறகு விஷ்ணு விசித்ராவுக்கு கொடுக்க, கூல் சுரேஷ், ரவீனா ஆகியோர் மாயாவுக்கு கொடுக்கிறார்கள். எனவே மாயாவுக்கு தான் அதிக கல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து ’மாயா உங்களிடம் எவ்வளவு கல் இருக்கிறது என்று கமல்ஹாசன் கேட்பதுடன் இன்றைய புரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் இது குறித்து கமலஹாசன் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.