close
Choose your channels

இது என்ன பிக்பாஸ் வீடா? பைத்தியக்கார இல்லமா?

Thursday, July 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகங்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒன்று அல்லது இருவர் மட்டுமே சர்ச்சைக்குரியவர்களாக இருந்து வந்தனர். அவர்களுடைய தலைமையில் இரு அணிகள் பிரிந்து இருந்தன

ஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஓரிருவர் தவிர மற்ற அனைவருமே சர்ச்சைக்குரியவர்களாக இருப்பதால் பிக்பாஸ் வீடே ரணகளமாக உள்ளது. குறிப்பாக வனிதா, மீராமிதுன், சாக்சி, ரேஷ்மா, மதுமிதா, ஆகிய ஐவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போல் வேஷமிட்டு கூத்தடிப்பதால் இது பிக்பாஸ் வீடா? அல்லது பைத்தியக்கார இல்லமா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு வருகிறது. குறிப்பாக மோகன் வைத்யா பெண் வேஷமிட்டு 'நான் தமிழ்ப்பொண்ணு' என்று மதுமிதா போல் பேசுவதும் அதற்கு கவினும் தர்ஷனும் கொடுக்கும் ரியாக்சனும் முழுசா சந்திரமுகியாக மாறிவிட்டதுபோல் தெரிகிறது. அதைவிட கவின் போட்டிருக்கும் கவர்ச்சியான உடை குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை

இருப்பினும் முதல் புரமோவில் எந்தவித பிரச்சனையும் இன்றி போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் சிரிக்க வைக்கும் அளவில் பிக்பாஸ் குழுவினர்களின் திரைக்கதை அமைந்தது ஒருவிதத்தில் திருப்தியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.