close
Choose your channels

முதல் வாரத்திலேயே வெளியேறிய கவர்ச்சிப்புயல் நடிகை .. சிகரெட் ஊதிய ஷகிலா.. என்ன நடக்குது பிக்பாஸ் தெலுங்கில்?

Wednesday, September 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் பல நாட்கள் நீடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவர்ச்சி புயல் நடிகை முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி நடிகை ஷகிலா சிகரெட் பிடிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அதில் கவர்ச்சி நடிகை கிரண், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோர்களும் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் எலிமினேஷன் நடந்த நிலையில் அதில் குறைந்த வாக்குகள் பெற்ற கவர்ச்சி நடிகை கிரண் வெளியேற்றப்பட்டார். இது மிகப்பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடிகை கிரண் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிவரை தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வாரமே வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் கிரண் மற்றும் ஷகிலா இருவரும் நெருங்கிய தோழிகளாக பிக்பாஸ் வீட்டில் பழகிய நிலையில் கிரண் வெளியேறிய சோகத்தில் ஷகிலா சிகரெட் ஊதி தள்ளும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது பலருக்கும் பல்வேறு விதமான அறிவுரைகள் சொல்லும் ஷகிலா, குழந்தைகள் உள்பட பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சிகரெட் புகைக்கலாமா என்ற கேள்வியையும் தற்போது நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.