close
Choose your channels

இவன்கூட குடித்தனம் பண்றதுக்கு தனியா இருந்திடலாம்.. தினேஷை வச்சு செஞ்ச பெண் போட்டியாளர்..!

Friday, December 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இவன் கூடத்தான் பண்றதுக்கு தனியா இருந்திடலாம், திரும்பி வந்துடாதம்மா தாயே என தினேஷ் குறித்து ரக்ஷிதாவுக்கு அறிவுரை கூறும் வகையில் பெண் போட்டியாளர் ஒருவர் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்த தினேஷ் மற்றும் விசித்ராவுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து கொண்டிருக்கிறது என்பதும் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட இருவரும் மோதிக் கொள்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் நேற்றைய நேருக்கு நேர் டாஸ்க்கில் இருவரும் ஒருவரை ஒருவர் ஸ்டே செய்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசித்ரா பாத்திரம் கழுவிக்கொண்டே தினேஷ் குறித்து புலம்பி கொண்டிருக்கிறார். அவரது புலம்பலில் ’சில மூஞ்சிகளை எல்லாம் பார்த்தா வெறுப்பா இருக்குது, எப்பவுமே அந்த வெறுப்பு போகவே போகாது, இவர்கள் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம், வாழ்ந்து என்ன பிரயோஜனம், கூட இருக்கிறவங்களுக்கும் தொந்தரவு, வேலை செய்யற இடத்திலும் தொந்தரவு தான்.

இந்த தொந்தரவு கூட எப்படி குடித்தனம் பண்றது, விட்டுட்டு ஓட வேண்டியது தான், ஒரு மூணு மாசம் கூட இவரை எல்லாம் வைத்து குடித்தனம் பண்ண முடியாது, இவன் கூட எல்லாம் யார் குடித்தனம் பண்ணுவா, திரும்பி வந்துடாதம்மா தாயே, ஒழுங்கா நீ தனியாவே வாழ்க்கை நடத்து, இவன் கூட குடித்தனம் பண்றதுக்கு தனியா இருந்திடலாம்’ என்று ரக்ஷிதாவுக்கு அறிவுரை சொல்லும் வகையில் விசித்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.