close
Choose your channels

'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை மீது இன்னொரு புகார் எழுந்துள்ளது.

‘பிகில்’ திரைப்படம் தெலுங்கில் ‘விசில்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அதே தேதியில் தெலுங்கு மாநிலங்களிலும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு பட இயக்குனர் சின்னிகுமார் என்பவர் ‘பிகில்’ இயக்குனர் அட்லி மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் பிரபல கால்பந்து வீரர் அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை ’ஸ்லம் சாக்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானா சினிமா கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், இந்த படத்தை உருவாக்கும் பணியில் தான் இருந்தபோது, இந்த படத்தின் கதையும் ‘விசில்’ கதையும் ஒன்று என தனக்கு தெரிய வந்ததாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார். ‘விசில்’ ரிலீசுக்குள் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.